மண்ணினால் தான்
பல நற்கலம் ஆகிடும்
உள் நின்ற யோனிகட்கு
எல்லாம் ஒருவனே
கண் ஒன்று தான்
பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வாறு
ஆகி நின்றானே….
– திருமூலர்.
மண்ணிணால் பல பொருட்கள் செய்யலாம்.
அதன் மூலப்பொருள் மண்ணாகும்.
கண்ணினால் பல பொருட்கள் பார்க்கலாம். கண்ணினால்
கண்ணையே பார்க்க முடியாது.
அதுபோல்
இறைவனை உணரமுடியும்..
பார்க்க இயலாது..
என்கிறார் திருமூலர்.